Jan 15, 2011

கண்கள்..

காதலின்
பாதி...
 கவிதை  
எனது 
கவிதைகளின் 
பாதி .....!!
உனது
 கண்கள் தான்.

By: Mirun

முகவரி


எனது முகவரி 
நீ ....
என்னிடம் பேசிய 
முதல் வரி..
இன்று ...
தொலைந்து விட்ட 
முகங்களுடனும் 
தவறவிட்ட
 முகவரிகளுடனும் 
தொலையா உன் ....
நினைவுகளுடனும் 
காத்து இருக்கிறேன்...
எனது முடிவின் ....
முகவரிக்காய்..

by : Mirun

என்னவள் இல்லாமல்..!!


என்னை..

சுற்றி வரும் 

நிமிடங்களை கேட்டேன் ..,

உங்களால் மட்டும் 

எப்படி முடிகிறது..! 

என்னவள் இல்லாமல் 

ஓடிச்செல்ல..


by : Mirun 


Jan 4, 2011

உடைந்து போன இரவு

உடைந்து போன.. என்

 இரவுகளைக் கேட்டால்

 உனக்காக...
 நான் எழுதிய கவிதைகள் சொல்லும்.. 
இன்று...
 நான் எழுதி முடித்த...
 என் கவிதைகளை கேட்டுப்பார்

 உடைந்து போன...

 என்

 இதயத்தை தான் காட்டும்