Dec 31, 2010

கவிதைகள்

உனக்காக எழுதப்பட்ட கவிதைகள் 

மறைக்கப்பட்டிருக்கின்றன..

நீ பார்க்க கூடாது என்பதற்காக இல்லை..

என் கவிதைகளை நீ 
நிராகரிக்க கூடாது என்பதற்காக.

Dec 30, 2010

பெண்ணே அலையில் அடித்து 
கரையில் விட்ட மீனாக துடிக்கின்றேன்..
மரணவாசல் என்னை 

வரவேற்க தயாராகி விட்டது..
வந்துவிடு பெண்ணே

 என்னை கடலில் சேர்க்க அல்ல.
என் உயிர்
உன் மடியில் போவதற்காய்.

Dec 26, 2010

தேடல்

உலகை மறந்து நான் உறங்கினாலும்

 உன்னை மறக்க என்னால் முடியவில்லை..

 தூக்கத்தை தொலைத்து

 துக்கத்தை சேர்த்துக்கொண்டேன்..
தொலைந்து போன என் வாழ்க்கையை தேடி அழைக்கின்றேன்...

 அது தொலைவானமாய் போய்கொண்டே இருக்கிறது...
நான் வந்த பாதையில் பூத்திருந்த பூக்களெல்லாம்

 கருகிக் காடாய் போய்விட்டது.

தொலைந்து போன எனது வாழ்க்கைகிடைக்க வில்லை என்றாலும் பறவாயில்லை.. 
காதலின் கடலில் விழுந்த

 நான் 

இனியேனும் கிடைப்பேனா..?
என்

 தேடல் தொடர்கிறது..

Dec 25, 2010

தற்கொலை

காதலுடன்

இறந்து போன காதலரின் உடல்கள்
இமைகளில்

மட்டும் வழியும் கண்ணீர்.

இவை
பல உறவுகள் இருந்தும் நம் காதலுக்கு கைகொடுக்க வில்லை


என்ற கவலையில் வந்த கண்ணீரா..
இல்லை..
ஆதரவற்ற உறவுகளிடம் இருந்து விடுதலையாகி 

இறப்பிலே சேர்ந்ததால் வந்த கண்ணீரா....

Dec 24, 2010

அழகிய ஆபத்து

அழகே ஆண்டவன் படைப்பின் அறிவை மழுங்க வைக்கும் 
ஆபத்தான ஆயுதம் நீ..
மனித உணர்ச்சிகளை 
மரணப்படுக்கையிலும்..
கொடுக்க உருவான நரம்பு நீ...
கவிதை எழதிய எனது எழுதுகோலை
ஓவியம் வரைய வைத்த
வித்தியாசமாதன பெண் நீ..
ஒரு கண்ணில் தீயும் மறு கண்ணில்
காமம் இரண்டையும்
ஆண்மனதில் நட்டு தெரியாமல் போகும்
புரியாத புதிர் நீ..
பெண்ணே ஏன் இந்த விளையாட்டு ?
நிறுத்திவிடு 
இல்லையேல்
உலகில் கவிஞர்கள் மட்டும் வாழ்வார்கள்
இல்லை
சிறைச்சாலைகள் பல உருவாகும்..
posted by:MiruN

வார்த்தை வலிகள்


என்னுள் படர்ந்த - உனது

 வார்த்தைகள் ஆயிரம்

ஊசிகளை - என் 

இதயத்துள் இறக்குகின்றன... 

எனக்கு வாழ்க்கை 
கற்றுத்தந்த வலிகளை விட

 கொடுமையானது 
உனது வார்த்தைகள்..
அதனால் தான் என்னமோ..

எனக்கு ....

அந்த வலிகள் கூட 

பெரிதாக தெரியவில்லை



mirun

Dec 23, 2010

உன்னைக்காணாமல்......



முதலில் 
உன் கைபட்டு மலர்ந்த 
ரோஜாப்பூவெல்லாம்..
இன்று 
மெதுவாக வாடுகின்றன..
என்னைப்போல் 
அதனால் எத்தனை 
நேரம் தான் உனக்காக 
காத்திருக்க முடியும்......

Dec 22, 2010

பெண்ணே!



நீ சாலையோரம் நடந்து போகையில்
உன் கை பட்டு
பூத்த பூக்களைப் போல
உன் விழி பட்டு
என் இதயப் பூவையும் மலர வைத்தாய்
எனக்கே தெரியாத அதிசயங்களை 
எனக்குள்ளே நடக்க வைத்தாய்
எனது கிறுக்கல் எல்லாம் 
கவிதையானது
எனது பேச்சுக்கள் எல்லாம்
பேச்சு இழந்து போனது
ஒவ்வொரு நொடிகளும்
உன்னை பார்க்க அடம் பிடிக்கையில்
உன்னை காதல் கொள்ளாமல் இருக்க 
நான் மட்டும் விதிவிலக்கா?

மன்னித்துவிடு தோழியே ....





தோழியே...- நீ 
என் அருகில் இருக்கையில்...
நான் படும் காயமெல்லாம் 
தானாய் ஆறிவிடும்..
என் காயங்கள் எல்லாம் 
மாயமாகிவிடும் -ஆயினும் ..
உன் இதயம் 
காயம் கொண்டு உன் கண்ணில் 
கண்ணீர் கண்டால்...!
என்னை மன்னித்துவிடு தோழியே ..
கண்ணீர் காணும் முன்னால் 
உன் காயத்தை என்னால் ..
ஆற்ற முடியவில்லையே என்று..!

ஞாபகப்படுத்துகின்றன....

உன் வருகைக்காய் .....



உன் வருகைக்காய்
காத்திருப்பது - என் 
கண்கள் மட்டுமல்ல - என் 
கவிதைகளும் தான்...

by: MiRuN