Dec 24, 2010

அழகிய ஆபத்து

அழகே ஆண்டவன் படைப்பின் அறிவை மழுங்க வைக்கும் 
ஆபத்தான ஆயுதம் நீ..
மனித உணர்ச்சிகளை 
மரணப்படுக்கையிலும்..
கொடுக்க உருவான நரம்பு நீ...
கவிதை எழதிய எனது எழுதுகோலை
ஓவியம் வரைய வைத்த
வித்தியாசமாதன பெண் நீ..
ஒரு கண்ணில் தீயும் மறு கண்ணில்
காமம் இரண்டையும்
ஆண்மனதில் நட்டு தெரியாமல் போகும்
புரியாத புதிர் நீ..
பெண்ணே ஏன் இந்த விளையாட்டு ?
நிறுத்திவிடு 
இல்லையேல்
உலகில் கவிஞர்கள் மட்டும் வாழ்வார்கள்
இல்லை
சிறைச்சாலைகள் பல உருவாகும்..
posted by:MiruN

1 comment:

  1. புரியாத புதிர் நீ..
    பெண்ணே ஏன் இந்த விளையாட்டு ?
    நிறுத்திவிடு
    இல்லையேல்
    உலகில் கவிஞர்கள் மட்டும் வாழ்வார்கள்

    Nijamava?

    ReplyDelete