May 9, 2011

மன்னிப்பு கேட்பதற்காய்...!

என் நியாயங்களுக்காய்....
உன்னைநான்
காயம் கொள்ள 
செய்திருக்கின்றேன்
ஆயினும்,
அந்த காயங்களுக்காய்....

என்னிடம் என்றுமே -நீ 
நியாயம் கேட்டதில்லை
நீ,
நியாயம் கேட்காத ..
அந்த நிமிடங்களில்

என் இதயம் 
வார்த்தை இன்றி 
அழுகின்றது..
உன்னிடம் மன்னிப்பு 
கேட்பதற்காய்...


by :MiRuN

No comments:

Post a Comment